Monday, October 4, 2010

அக்கரை பச்சை

வேகமாய் ஓடும் ரயிலில் இருந்து எட்டி பார்க்கிறேன்
தூரத்தில் தெரிந்தன ஒன்றிரண்டு வீடுகள்
சுற்றிலும் பச்சை பசுமையாய் வயல் வெளி
எனக்குள்ளே நினைத்து கொள்கிறேன்
'ஆட்களே இல்லாத இந்த அழகான ஊர்
ஆனால் எவ்வளவு நாட்களுக்கு?
இப்படி அக்கம் பக்கம் ஏதும் இல்லாமல்
எத்தனை பேர் தான் இப்படி இருக்கிறார்களோ?
என்ன தான் செய்து கொண்டிருப்பார்களோ?
சலித்து விடாதோ அவர்களுக்கு?'

****

எங்கள் கிராமத்து வீட்டினுள் தலை வைத்து படுத்திருக்கிறேன்
தண்டவாளத்தில் ரயில் வரும் அரவம் கேட்டது
எழுந்து நின்று வேடிக்கை பார்க்கிறேன்
எனக்குள்ளே நினைத்து கொள்கிறேன்
'வேகமாய் ஓடும் இந்த ரயிலுக்குள்
எத்தனை பேர் தான் இப்படி இருக்கிறார்களோ?
என்ன தான் செய்து கொண்டிருப்பார்களோ?
அப்படி எங்கே தான் போய்/வருகிறார்களோ?
சலித்து விடாதோ அவர்களுக்கு?'

Followers